Friday, March 15, 2013

அம்முகுட்டிக்கு PART #24


அலைமகள்..!!
சற்று தொலைவில் கருவாகி,
வரவர மலைபோல் வளர்ந்தும்,
உயர்ந்தும், தாழ்ந்தும், நீண்டும், குறுகியும்
ஏதேதோ சப்தத்துடன், போரிட்டு திரும்பிவரும்
கணவனை நோக்கி ஓடிவரும் மனைவிபோல்
என்னை நோக்கி வேகமாக ஓடிவந்து
காலடியில் உடைந்து நுரையாய் கரைந்துபோகிறாள்
இந்த அலைமகள் - உன்னைப் போல்
சொல்லவந்ததை சொல்லாமலேயே !!


தமிழாய் நிற்க ..!!
அன்பு பந்தலிலே மலர்மாலை சூடிநிர்க்க,
மனமினையும் மணவிழாவின் இவ்வினிய தருணத்திலே,
மலையோடு மனதையும் பரிமாற்றும் வேளையிலே,
ஈருயிரும் ஒருயிராய் இணையுமிந்த காலையிலே
தோட்டம்நிறை பூக்களாய் - அன்பு பெற்றோரும்,
ஆதரவு உறவுகளும், தோள்கொடுக்கும் தோழர்களும் பூத்துநின்று
"வள்ளுவனும் வாசுகியாய் நிலமிசை நீடு வாழ்ந்து
தாரணிபுகழ் தமிழாய் செழித்து நிற்க" - என
வாழ்த்த வரும் அனைவரையும்
வணங்கி நிற்கும் நாங்கள் ..!

அம்முகுட்டிக்கு PART #23


மனதும் நினைவுகளும் ..!!
மரணத்திற்குப்பின் எங்குபோய் தொலையும்
இந்த மனதும் நினைவுகளும் ??
சமீபத்தில்தான் கண்டறிந்தேன்..
எரிந்துபோன 'மெமரி கார்டு'ல் இருந்த
பாடல்கள் எங்கு போகுமோ அங்கே ..!!


கவணத்திற்கு ...!
காதலித்து திருமணம் செய்வோர் கவணத்திற்கு ...!
மனைவியை பெயர்சொல்லி அழைக்கும்போது
கூடுமானவரை ....
காதலியின் பெயரை
உச்சரித்துவிடாமல் இருப்பது உத்தமம் ..!!

அம்முகுட்டிக்கு PART #22

  
எதிர்வினை ..!!
சராசரி வருமானம் மற்றும்
சராசரி பொருளாதாரம் கொண்ட
ஒருவன் அல்லது ஒருவளது
காதலுக்குவரும் எதிர்வினையானது
அவனின் அல்லது அவளின்
சகோதர சகோதரிகளின் எண்ணிக்கைக்கு
நேர்தகவில் இருக்கும் ..!


(புது) ஆர்கிமிடிஸ் ..!!
ஒருவன் தங்குதடையின்றி ஒருவளது காதலில்
மூழ்கியிருக்கும்போது ஏற்படுவதாக தோன்றும்
மனநிம்மதி அல்லது மனமகிழ்ச்சியானது
அவளால் வெளியேற்றபடப்போகும்
மனநிம்மதி அல்லது மனமகிழ்சிக்குச் சமம்...!

ஆலமரம் ..!!
"நம் காதல் ஒரு ஆலமரம்டா" - நம்பப்பட்டது !
அம்மா சொல்லும் கதைகளை அப்படியே
நம்பும் குழந்தைபோல !

ஏன் ஆலமரம்?
இப்போது புரிகிறது.

காலம் நகர
உறவு விழுதுகள் சூழ
வேரற்றுப் போவதாலா ??

அம்முகுட்டிக்கு PART #21



மரங்கொத்தி ..!!
மதத்தை மரிக்கவைத்து, சாதியை சாம்பலாக்கி
உன்னைநான் நெருங்க செய்தது
ஆண்டாண்டுகாலமாய் வளர்ந்து
அசுரனாய் நிற்கும் ஆலவிருட்சத்தை
அலகால் பிளந்துவிடத் துடிக்கும்
அபலை மரங்கொத்தியின்
அற்ப முயற்சி ..!!


ஒரு உண்டியல் ..!!
ஒரு உண்டியல் உள்ளது !
கன்னக்குழி இருட்டினை
மான்விழி பார்வையை
மயில்தோகை கூந்தலை
மடிதுயில் உறக்கத்தை
'மை'கரைசூழ் கண்ணீரை
பாடிய வளையல்களை
கொஞ்சிய கொலுசுகளை
கேள்விகுறி காதுகளை
நங்கூர நக ஒளியை
சிரித்ததை - சிணுங்கியதை
கொடுத்ததை - கேட்டதை - வாங்கியதை
எல்லாம் வைத்துள்ளேன் அதில்..!

வயல்வெளியும் வறண்டிருக்கும்
கடுங்கோடை பெருவெளியில்
கண்ணிமையும் கருகிப்போகும்
கடும்பஞ்ச நாட்களில்
உயிர்கொடுத்து உதவும் எனக்கு ..!!

அம்முகுட்டிக்கு PART #20



கதை ..!!
இப்போது வந்து கேட்கிறாய் !!
உனக்கு கதை கேட்பதற்கும்
எனக்கு கதை சொல்வதற்குமான
வயது வந்துவிட்டதென்று நினைக்கிறாயா ??
என்ன சொல்வது இப்போது !

தெரியுமா ?
இந்த வயதில் சொல்லும் கதைகள்
சுகப்பிரசவமாவது இல்லை

ரத்தம் தெறிக்க - மனதை
கீரியெடுக்கும்போதுதான்
ஜனித்து தொலைகின்றன.

ஆனாலும்..!
மறைப்பதற்கு ஏதும் இல்லாதபோது சிறிது
சொல்வதற்கும் கதைகள் உள்ளன ..!!

சொல்கிறேன் வா..!!!

அம்முகுட்டிக்கு PART #19


போன்சாய் ..!!
வைத்தது என்னனமோ ஆலமரம்தான்..!

அவள் பெற்றோருக்காக ஒரு கிளை
என் பெற்றோருக்காக ஒரு கிளை
அவள் உடன்பிறப்புகளுக்காக ஒரு கிளை
என் உடன்பிறப்புகளுக்காக ஒரு கிளை
சமூகத்திற்கு ஒரு கிளை
சாக்கடை சாதிக்கு ஒரு கிளை
மயிறு மதத்திற்கு ஒரு கிளை
என் பொருளாதாரத்திற்கு ஒரு கிளை
இப்படியாக கிளைகளை வெட்டியபின்
வீட்டுக்குள்
ஒரு ஓரத்தில்
அட்டைபெட்டிக்குள்
"போன்சாய்" மரமாய் மாறிநிற்கிறது - எங்கள் காதல்..
மனைவிக்கு தெரியாமல்..

சத்தியமாய் வைத்தது என்னவோ ஆலமரம்தான்..!

அம்முகுட்டிக்கு PART #18


மனமாடுகள் ..!!
பழக்கப்பட்ட பாதை,
பழக்கப்பட்ட மாடுகள்,
வண்டிக்காரன் தூங்கினாலும்
வழக்கம்போல கொண்டுசேர்க்கின்றன
இம் மனமாடுகள் .
அவளிடமே ...!


நானும் நாமும் ..!!
நாமாக நாமிருந்தபோது
நீயாக நானிருந்தேன்,
நானாக நீயிருந்தாய்,
நீயாக நீ சென்றுவிட்டாய்
நானாக நானிருக்கிறேனா ?


நானாகி ..!!
நிலவும் தென்றலும்
இல்லாமல் போனால் - இந்த
கவிதை எழுதுபவனுங்க என்னாவான்கள் ?
பயம்தான் !!
நீ இல்லாமல்போன நானாகிப்போவான்களோ ?!

அம்முகுட்டிக்கு PART #17



திராட்சை முந்திரி ..!!
வெடிக்காமல்போன பட்டாசை
எட்டிநின்று ஆராயும் சிறுவன்போல,
அடுத்தநொடி வைத்துள்ள ஆச்சர்யங்களை - எப்போதும் எதிர்கொள்ள தயாராகி நெடுநாட்களாகிவிட்டது
அணைந்திருக்கலாம், வெடிக்கலாம்
அல்லது புஸ்வானமும் ஆகலாம் !!

ஆனாலுமடி
உன்நினைவுகள் எப்போதும்
எதிர்பாராத இனிமையைத் தரவல்லன
பாயசத்தில் ஆங்காங்கே தட்டுப்படும்
திராட்சை, முந்திரி போல ..!!


எதிர்ச்செயல் ..!!
எல்லாவற்றுக்கும் எதிர்ச்செயல் செய்தாய்!
பார்க்காதே - "பார்ப்பேன்"
பேசாதே - "பேசுவேன்"
சிரிக்காதே - "சிரிப்பேன்"
வராதே - "வருவேன்""
தராதே - "தருவேன்"
முத்தமில்லை முத்தமில்லை
“முத்தமுண்டு முத்தமுண்டு முத்தமென்பதுண்டடா”
பாரதிகவி பாடினாய்

கடைசியாக
"விலகிவிடாதே" என்றேன் !

அம்முகுட்டிக்கு PART #16



90 சதவிகிதம் நாத்திகன்..!!
கடவுள், பேய்,
சடங்கு,சாஸ்திரம்,
சம்பிரதாயம், வாஸ்து,
புராணம், இதிகாசம்,
ஜாதகம், குறி,
செய்வினை, பரிகாரம்

எல்லாமே பச்சைஅயோக்கியத்தனம் ...

ஒரு சித்திரை பின்னிரவு நிலவொளியில்
பெருமீசை வைத்த கோடங்கியின்
"நல்லகாலம் பொறக்குது .... குடு குடு குடு"
ஆரூடத்தின் அடுத்த பகல்பொழுதின்
தேர்திருவிழாவில்,
"ரெண்டு முழம் மல்லிபூ,
ஒரு ரோஜா மொக்கு"
என்று வாங்கிக்கொண்டு இருந்தாய்!

குடுகுப்பையை தவிர
எல்லாமே பச்சைஅயோக்கியத்தனம் ..!