புலம்பல் ..!!
"நான் என்ன செய்ய ?
ஒரு கையால் என்னையும்
மறுகையால் என் அம்மாவையும்
பற்றிக்கொண்டுள்ளார் அப்பா"
புலம்புகிறாயே !
நன்றாக பாரடி - நான்
இரு கைகளாலுமே உன்னைத்தான்
பற்றியிருக்கிறேன் - தெரியவில்லையா உனக்கு ?
கர்வம் .. !
கோடி கோடியாய் பணமும்,
கோட்டை போல வீடும்,
தட்டு தட்டாய் தங்கமும்,
வாசலுக்கு ஒரு காரும்,
கணக்கில்லா தோட்டமும் உள்ளதென்று
சவால் விட்டான் என்னிடம்
"நீ இருகிறாய் என்னிடம்" என்றேன்
வந்த வழியே போய்விட்டான் வாய்மூடி
ஆகவே என்னை ..!!
நீ எழுதும் பென்சிலின்
இரண்டு முனைக்கும் பயங்கரசண்டை !
பஞ்சாயத்துக்கு அழைத்தது என்னை
ஒரு முனை சொன்னது
"கொஞ்சுவதுபோல விரல்பிடித்து எழுதுகிறாள்
ஆக என்னை காதலிக்கிறாள்"
மறு முனை சொன்னது
"எழுதுவதைவிட என்னை செல்லமாய்
உதட்டில் வைத்துகொண்டு இருப்பது அதிகம்
ஆக என்னைத்தான் காதலிக்கிறாள்"
என்ன தீர்ப்பு சொல்லட்டும் ?
என்னைத்தான் காதலிக்கிறேன் என்று
அதனிடம் சொல்லித்தொலையேண்டி !!!
கணக்கு டீச்சர் ..!!
"கணக்கு டீச்சர் ஆவேன்" என்று அடம் பிடிக்கிறாய்,
முக்கோணத்தின் மூன்று குத்துக்கொடுகள்
சந்திக்கும் புள்ளி "சக்தி" என்றாயாமே !
நானும் கூட கேட்பேன்
"பத்து சென்டிமீட்டர் ஆரமுள்ள
அம்மு வார்க்கும் அழகான தோசை போல
ஒரு வட்டம் வரைந்து
அதன் பரப்பளவை காண்க"

No comments:
Post a Comment