வரவேற்பு ..!!
நீ வந்தது எப்படியோ தெரிந்துவிட்டது
என் வீட்டு கறிவேப்பிலை செடிக்கு
இரண்டு நாட்களாக
மல்லிகை பூ பூக்கிறது அதில்..!
வெள்ளையாடாதடா . .!!
"வெள்ளையாடாதடா"!
நீ ஒரு வார்த்தையில் பேசும்
அதிகபட்ச அழகுடைய வார்த்தை - அல்லது
வாக்கியம் அல்லது கவிதை அல்லது பாடல்.
இதிலேயே காதல் கோபம்,
கருணை அன்பு வெட்கம்
எல்லாவற்றையும் சொல்கிறாயே !
ஒரு வார்த்தையில் கூட
தமிழ் பேசலாம் போலிருக்கிறதே!
சிகிச்சை ..!
காலையில் கேட்டேன்
"ஜுரம் நெருப்பாய் கொதிக்கிறது" என்றாய்
மாலையில் நீயே சொன்னாய்
"எல்லாமே சரியாகிடுசுங்க".
உனக்கு தெரியாதடி - உனக்காக
இங்கு நான் மாத்திரை போட்டுக்கொண்டது !
மறைக்காமல் சொல் ..!
எப்படி விளக்குவதென்று தடுமாறும்போது
"இதான நீ சொல்லவந்தது ? " என்கிறாய்
பெரிய மனுசிபோல .
பக்கம் பக்கமாய் விளக்கிவிட்டு
"என்ன புரிகிறதா?" என்றால்
ஐஸ் தின்று அம்மாவிடம் மாட்டிகொண்ட
குழந்தை போல விழிக்கிறாயே !
நீ உண்மையிலேயே குமரியா
இல்லை இன்னும் குழந்தையா ?
மறைக்காமல் சொல்லடி உண்மையை....
மறைக்காமல் சொல்லடி உண்மையை....
நீயாக நீ ..!!
நானாக நான் இல்லாதபோது
நீயாக நீ வந்தாய்
என்னை காட்டினாய் எனக்கு
நீயார் என்பதைத்தான் மறந்துவிட்டாய் பாவம்!!
திருடர்கள் ஜாக்கிரதை ..!
உன்னை கடக்கும் போதெல்லாம்
மனது தானே சொல்லிகொள்கிறது !

No comments:
Post a Comment