Sunday, August 1, 2010

அம்முகுட்டிக்கு PART #2


"கூ... கூ"
குயிலோடு பேசுவேனென்று "கூ... கூ" என்கிறாயே
சரியாக பாரடி
உன்னோடு பேசும் ஆசையில்
காகம்தான் அப்படி கூவிக்கொண்டு இருக்கிறது
முகத்தை மறைத்தபடி !


பட்டுப்பூச்சி ..!
புடவை கட்ட தெரியாதாமே உனக்கு ?
கேட்டதற்கு "யாரும் சொல்லிதரவில்லையே" என்கிறாயே
இது உனக்கே நியாயமா,
பட்டுபூச்சி என்ன "டெக்ஸ்டைல் டெக்னாலஜி"யா படிச்சது?

கண்டுபிடிப்பு ..!!
குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் - டார்வின்
மனிதரில் இருந்து பிறந்தவள்தான் தேவதை - சக்தி

தேவதை வீடு ..!!
சந்து பொந்துக்கெல்லாம் பெயர்பலகை
வைக்கிறார்கள், உன்வீட்டு முன் ஒன்று
வைத்தால்தான் என்ன ?
"தேவதை வாழும் வீடு" என்று !

No comments:

Post a Comment