Sunday, August 1, 2010

அம்முகுட்டிக்கு PART #3


கொலுசு ..!
கட்டிய புடவையோடு
என்னை நம்பிவரும்போதும்
மறக்காமல்
அந்த கொலுசுகளை கொண்டுவந்துவிடடி
உன்னை விட அதுதான்
என்னிடம் அதிகம் பேசுகிறது !!

பூ பிம்பம் ..!
நீ பூவைக்க விரும்புவதில்லை ...
ஆனாலும் நீ கனவில் வந்து சென்றபின்பு
மனதில் நின்ற பிம்பத்திற்கு வைத்துப்பார்த்தேன்.
அடிப்பாவி ! ..
இப்படியே பூச்செடி பக்கம் போகாதேடி
மீதம் உள்ள பூக்களெல்லாம்
"அம்மா! என்னையும் இறக்கிவிடு அவளிடம் போகணும்"
என்று செடியிடம் அடம்பிடிக்கும் ...

அசலும் வட்டியும் ..!
"இதோ தந்துவிடுகிறேன்" என்று வாங்கிபோனாயே
இதோடு வருடம் ஐந்தாகிவிட்டது.
அசலும் அகப்படவில்லை,
வட்டியும் வந்தபாடில்லை
பார்க்கலாம் பார்க்கலாம்
எப்போதான் திருப்பி தருகிறாயென்று
வாங்கிப்போன மனதை !!

No comments:

Post a Comment