அள்ளி எடுப்போரிடமெல்லாம்
பால்மடி தேடும்
கண்திறக்கா குழந்தை போல ..
சந்தித்த மனிதரில் எல்லாம்
உன் முகம் தேடினேன்.
எழுதி எழுதிப் பார்த்தாலும்
எழுத்து கூட்டிப் படித்தாலும்
தவறாகவே வருகுதடி உன்பெயர்.
அக்காகிதத்தை,
குப்பையில்போட மனம்வராமல்
சேர்த்து வைப்பதில் வாழ்கிறதடி
நம் காதல் - பிறந்த குழந்தையாய் ..!!
தேவதையும் பேயும் ..!
அம்மு குணமிருந்தால் பேயும் தேவதைதான்...
இல்லாமல் போனால்
தேவதையும் பேய்தான் போ ...
பொய் ..!
என்ன பைத்தியக்காரத்தனம் ?
இன்று அம்மாவாசையாம் ...
கால்முளைத்த வெள்ளை நிலவாய்
அவள் மொட்டைமாடியில் நிற்பது
அவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா ?
பூப்போட்ட துப்பட்டா ..!
இவ்வளவு நேரமாக இல்லை
இப்போதுதான் இத்தனை நட்சத்திரங்கள்.
புரிந்துவிட்டது !
பூப்போட்ட துப்பட்டாவை எங்கோ
உதறுகிறாள் அவள் !

No comments:
Post a Comment