Sunday, August 1, 2010

அம்முகுட்டிக்கு PART #4


மனபாரம் ..!
ஒய்யாரமாய் அமர்ந்து
ஒவ்வொரு கல்லாக போடுகிறாயே
இதுஎன்ன குளக்கரையா ?
குழந்தை மனதடி பாவி !
மனபாரம் தாங்கவில்லை - மரியாதையாக
போட்ட கற்களை நீயாகவே எடுத்துவிடு
உள்ளே குதித்தாவது ..!



புதுப்பேனா ..!!
புதிதாய் எந்த பேனா வாங்கினாலும்
எழுதிப்பார்ப்பேன் உன் பெயரை.
சரியாக எழுதவில்லை என்றாலும்கூட
இதுவே பிடிக்கிறது என்று எடுத்துவந்துவிடுவேன்
உன்பெயர் எழுதிய ஒரே காரணத்தால்


அழகும் பேரழகும் ..!
நீ பொட்டு வைப்பதில்லை - அது அழகு
"சீ.. போடா" என்று உச்சந்தலையில் செல்லமாய்
கொட்டு வைக்கிறாயே - அது பேரழகு ..!

No comments:

Post a Comment