Friday, February 17, 2012

இன்னும் எத்தனை தமிழ் ரத்தம் வேண்டும் ??

அற்புதமான அறிவு ஜீவிகள் சொல்வதெல்லாம் இதுதான் “வாழும் நாட்டிலேயே இன்னொரு நாடு கேட்கலாமா ??" என்ன அறிய சிந்தனை ??!!!


10 வருடங்களாக குடியிருக்கும் உன்னை, 15 வருடங்களாக குடியிருக்கும் உன் அண்டை வீட்டுக்காரன் அடித்து துரத்தினால் என்னசெய்வாய் ??, அவனை பொறுத்தவரை நீ அவனுக்கு பின் வந்தவன் தானே !!


சுமார் 200 வருடங்களுக்கு முன்னால் உலகில் இருந்த நாடுகள் எத்தனை, இப்போது இருப்பவை எத்தனை ??, எப்படி வந்தன இத்தனை நாடுகள்?? நாம் ஏன் மொழிவாரிய மாநிலங்களாக நாட்டை பிரித்து வைத்துக்கொண்டோம் ??. வெவ்வேறு மொழி பேசுபவர்களுக்கு வெவ்வேறு பழக்க வழக்கங்கள் இருக்கும் என்பதால்.. அதனால் எதிர் காலத்தில் வரும் பிரச்சனைகளை தவிர்பதற்காக.... ஆனால் வெவ்வேறு மொழி, வெவ்வேறு பழக்க வழக்கங்கள், வெவ்வேறு கலாச்சராம், வெவ்வேறு மதம் கொண்டவர்களை கூசாமல் சேர்ந்து வாழச்சொல்கிறோம், அதுவும் உயிரோடு கொல்பவனுடன் ?!! முதலில் நம்மால் முடிந்ததா??!!



குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும், வயதானவர்களையும், அப்பாவி மக்களையும் கொல்வதை நீங்கள் தடுக்கவில்லை...,
ஆனால்,
என் வரிபணத்தில் என் மக்களை கொல்வதற்கு உதவியதேன்?

ராணுவ உதவிகள் ஏன் ?
கப்பல்கள் ஏன் ?
ராடார்கள் ஏன் ?
பாஸ்பரஸ் குண்டுகள் ஏன் ?
க்ளஸ்டர் குண்டுகள் ஏன் ?
ஆயுதங்கள் ஏன் ?
அவ்வளவு மிகுந்து விட்டதா என் வரிப்பணம் ?
இதற்காகத்தானா உங்களை தேர்ந்தெடுத்தோம் ?

தமிழனை தவிர மற்றவன் ஏதாவது நாடுகளில் சிறிதாக அடிபட்டாலும் எத்தனை கேள்விகள், எத்தனை ஆர்பாட்டங்கள், எத்தனை கண்டனங்கள், எத்தனை விசாரணைகள்... !!! ஆனால் தமிழ் இனத்தை அழிப்பவனுக்கு அத்தனை உதவிகளையும் செய்துவிட்டு நாங்கள் கொடுரமாய் சாவதை பார்த்து பார்த்து விஷமமாய் சிரிப்பதன் காரணம் என்ன ??
தமிழன் இந்தியன் இல்லையா, அல்லது தமிழன் மனிதனே இல்லையா ???

No comments:

Post a Comment