Wednesday, April 23, 2014

நினைவில் கொள்கிறேன் ....


அவன் வந்தது வீட்டில் திருடன் புகுந்தது ....
நீ வந்தால் அது வீட்டில் தீ பிடிப்பது .....

நினைவில் கொள்கிறேன் ....
பொருளாதாரத்தை சீர்குலைத்தவர்களை....

என் இனத்தையே அழித்தவர்களை ....



என் தேச பற்றை கேள்விக்குறியாக்கியவர்களை ...
ஊழல் பெருச்சாளிகளை ...



மேலும் நினைவில் கொள்கிறேன் ....
ஆள காத்திருக்கும் அற்புத தலைவர்களின் திருவிளையாடல்களை ...
நீங்கள் எடுத்துகொண்ட பிரமாணங்களை ...
உங்கள் நோக்கங்களை ....
உங்கள் கடந்த கால சாதனைகளை ....
உங்கள் திட்டங்களை ...



உங்கள் ஒன்றுக்கும் உதவாத மாடல்களை ....
உங்கள் பொய் பிரச்சாரங்களை...  
உங்கள் வருணாசிரம கனவுகளை ....


எங்களுக்கு தெரியும் .
இதுவரை ஆண்டவர்களுக்கும், இனி ஆளத்  துடிப்பவர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளும் வித்தியாசங்களும் ....

அது ....
அவன் வந்தது வீட்டில் திருடன் புகுந்தது ....
நீ வந்தால் அது வீட்டில் தீ பிடிப்பது .....

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை "அமெர்த்தியா சென்" சொல்வதென்ன ? 

"மத ஒற்றுமைக்கும், சமூக நீதிக்கும், முன்னேற்றத்திற்கும், பொருளாதார சீர்திருத்தத்திற்கும், தமிழ் நாடு சென்று பாருங்கள், இதெல்லாம் கடந்த நாற்பது ஆண்டுகளில் பெற்றது"

உங்கள் மாடல் எங்களுக்கு தேவை இல்லை ...வேண்டுமானால் 
எங்கள் பெரியார் மாடலை உங்கள் நாட்டில் நிலைநாட்டி கொள்ளுங்கள் ....
மனிதர்களை மனிதர்களாக கொள்ளுங்கள் ....
உங்கள் மதங்களை கொல்லுங்கள் ...


No comments:

Post a Comment